பிற செபங்கள்
தாய்மை கொண்ட பெண்கள் செபம்:
கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது
திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த
சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது,
வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப்
பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில்
கிருபையாயிரும். நானோ பாவத்தில் பிறந்து எல்லா
உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவைக்கு இட்ட
ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது. ஆகையால் என் மிடிமையைப்
பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என்
வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக
சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும். மேலும் அந்தப்
பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது
திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக்
கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே
நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
பெற்றோரின் செபம்:
மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து
என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை
நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித
ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற எனக்கு
உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு
எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ
அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது
கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது
அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப்
பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய்
இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும்,
அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை
விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை
ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி
செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள்
அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக்
கொள்ளும்.
ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில்
ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும்
இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை
தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில்
சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின்
கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள்
இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின்
கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள்
ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு
உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
அரசுசெய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது
சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -
ஆமென்.
பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்:
என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில்
என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும்
பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும்
உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான்
அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய்
மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில்
நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில்
என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.
காவல் தூதரை நோக்கி செபம்:
எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே!
தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எனக்கு ஞான
வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -
ஆமென்.
அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும்
ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும்
களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும்,
தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும்
தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.
இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்.
தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு:
எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா,
என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக
உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு
அனுக்கிரகம் செய்தருளும். நமது ஆலயத்தை யாதாமொருமன்
அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று
திருவுளம்பற்றினீரே, சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என்
உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால்
தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம்
கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி
இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து
இதனை அர்ச்சித்தருளினார். ஆகையால் தூய்மையின் உருவான
இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர்
மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை
வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என்
ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை
செய்தருளும். என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த
விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி
வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும்
கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர்
பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன்.
உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகில்
தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் ! அவர்களும்
என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள், ஆகையால்
என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை.
மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே ! தேவரீர் அவர்களை
உறுதிப்படுத்தினது போல் என்னையும் தூய நெறியில்
உறுதிப்படுத்தியருளும். அவர்களால் ஆனது போல் உம்மைக்
கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும். உமது
தோத்திரத்துக்கும் என் இரட்ச்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு
தன் சோதனையால் என்னை மயக்கி என் மீது வெற்றிக் கொண்டு
விடாதபடி அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடே
வேண்டிக்கொள்ளவும், என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே
நடக்கவும் தயைபுரியும். நான் என் புத்தி நினைவைத் திடமாய்
ஒழுங்குபடுத்தி என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப்
பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி என்னை
அசுத்தப்படுத்துவதானன எல்லாவற்றையும் மகா அருவருட்னே
ஆலோசித்து ஓர் அர்ப்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி
நுணுக்கமான பக்தியுடன் சுமித்திரையாய் நடந்து மிகப் புச்சியமும்
மழுங்குவதற்கு எளிதுமாகிய இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல்
காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.
தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு
அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை
மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக்
கைவிடாமல் காத்தருளும். - ஆமென்.
தாய்மை கொண்ட பெண்கள் செபம்:
கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது
திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த
சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது,
வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப்
பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில்
கிருபையாயிரும். நானோ பாவத்தில் பிறந்து எல்லா
உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவைக்கு இட்ட
ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது. ஆகையால் என் மிடிமையைப்
பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என்
வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக
சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும். மேலும் அந்தப்
பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது
திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக்
கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே
நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
பெற்றோரின் செபம்:
மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து
என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை
நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித
ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற எனக்கு
உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு
எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ
அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது
கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது
அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப்
பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய்
இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும்,
அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை
விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை
ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி
செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள்
அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக்
கொள்ளும்.
ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில்
ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும்
இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை
தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில்
சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின்
கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள்
இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின்
கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள்
ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு
உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும்
அரசுசெய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது
சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -
ஆமென்.
பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்:
என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில்
என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும்
பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும்
உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான்
அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய்
மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில்
நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில்
என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.
காவல் தூதரை நோக்கி செபம்:
எனக்குக் காவலாய் இருக்கிற சர்வேசுரனுடைய சம்மனசானவரே!
தெய்வீக கிருபையால் உம்மிடத்தில் ஒப்படைக்கப்பட்ட எனக்கு ஞான
வெளிச்சம் கொடுத்து என்னைக் காத்து வழிநடத்தி ஆண்டருளும். -
ஆமென்.
அனுதின வேலைகளை ஒப்புக் கொடுக்கும் செபம்:
தெய்வீகத் தொழிலாளியாகிய இயேசுவே, அடியேன் இன்று செய்யும்
ஜெபங்களையும், தொழில்களையும், எனக்கு ஏற்படும்
களைப்பு,ஆயாசம், துன்ப வருத்தங்கள் அனைத்தையும்,
தொழிலாளிகளின் மனந்திரும்புதலுக்காகவும், அர்ச்சிப்புக்காகவும்
தேவரீருக்கு ஒப்புக்கொடுக்கிறேன். -ஆமென்.
இயேசுவின் திரு இருதயமே, உமது அரசு வருக !
நாசரேத்து அன்னையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்.
தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு:
எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா,
என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக
உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு
அனுக்கிரகம் செய்தருளும். நமது ஆலயத்தை யாதாமொருமன்
அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று
திருவுளம்பற்றினீரே, சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என்
உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால்
தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம்
கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி
இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து
இதனை அர்ச்சித்தருளினார். ஆகையால் தூய்மையின் உருவான
இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர்
மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை
வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என்
ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை
செய்தருளும். என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த
விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி
வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும்
கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர்
பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன்.
உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகில்
தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் ! அவர்களும்
என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள், ஆகையால்
என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை.
மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே ! தேவரீர் அவர்களை
உறுதிப்படுத்தினது போல் என்னையும் தூய நெறியில்
உறுதிப்படுத்தியருளும். அவர்களால் ஆனது போல் உம்மைக்
கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும். உமது
தோத்திரத்துக்கும் என் இரட்ச்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு
தன் சோதனையால் என்னை மயக்கி என் மீது வெற்றிக் கொண்டு
விடாதபடி அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடே
வேண்டிக்கொள்ளவும், என்மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே
நடக்கவும் தயைபுரியும். நான் என் புத்தி நினைவைத் திடமாய்
ஒழுங்குபடுத்தி என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப்
பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி என்னை
அசுத்தப்படுத்துவதானன எல்லாவற்றையும் மகா அருவருட்னே
ஆலோசித்து ஓர் அர்ப்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி
நுணுக்கமான பக்தியுடன் சுமித்திரையாய் நடந்து மிகப் புச்சியமும்
மழுங்குவதற்கு எளிதுமாகிய இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல்
காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.
தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு
அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை
மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக்
கைவிடாமல் காத்தருளும். - ஆமென்.